Posts

போதிதர்மர்

Image
  போதிதர்மர்   கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துத்துச் சிற்றரசர் ஒருவர்   போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரி்வைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ ஜென்“ தத்துவம். இது , பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சி்லை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கடல்கடந்த தமிழ் வணிகம்

Image
கடல்கடந்த தமிழ் வணிகம் ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்யாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று   கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்திய வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு , மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரைச் சென்று சேருவது சம்பந்தமான ஒப்பந்தம் அது. அங்கு இருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ரோம் நாட்டை அடைவதற்கு , வேறு ஓர் ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.   இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால் , அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு , கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்...

பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையழுத்துப் பிரதிகளும்

Image
பிரொன்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும்                           கையழுத்துப் பிரதிகளும் பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ( Bibliothque Nationale ) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டையக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப்பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்,  சரளிப்புத்தகம் , புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் அங்கு உள்ளன.

சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!

Image
          சீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு!   சீ்ன நாட்டில் காண்டன் நகருக்கு 500 மைல் வடக்கே சூவன்சசெள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக   விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர் .அதன்   காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது . அது சீன பேரரசனான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாழை இலையில் விருந்து

Image
வாழை இலையில் விருந்து தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவை அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி , கீரை ,   கூட்டு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாக பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து , அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை பரிவுடன் பரிமாறுவர்.

ஏழு அடி நடந்து சென்று வழியனுபபினர்

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா

Image
    தாய்லாந்து மன்னரின்         முடிசூட்டு விழா தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருபவம்பாவை , திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.